இனி ஐடிஐ மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்! - முதல்வர் கருணாநிதி

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணச்சலுகை வழங்கும் திட்டம் 1990-ம் ஆண்டில் தி.மு.க. அரசினால் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், அத்திட்டம் படிபடியாக மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்க்கும் விரிவு படுத்தப்பட்டது. பள்ளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்பட்டது போல 2007-ம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி களிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்க்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் 9.7.2009 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் முடிவில் அரசு வெளியிட்ட அறிவிப் பிற்கிணங்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி,ஐ.) பயிலும் மாணவ- மாணவியர்க்கும் இலவசப் பேருந்துப் பயணச்சலுகையை வழங்கி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் பயனாக, ஏறத்தாழ 21 ஆயிரத்து 500 மாணவ-மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே, 84 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications