தமிழகத்தில் முதல்முறையாக கோவை பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி!

Subscribe to Oneindia Tamil

Mayor Venkatachalam
கோவை: பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனி காலை நேர சிற்றுண்டியும் வழங்கப்படும் என கோவை மாநகர மேயர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

கோவை மாநகராட்சியின் 2010-2011 பட்ஜெட்டை மேயர் வெங்கடாசலம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் புதிய திட்டம் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு சாப்பிடாமல் நிறைய குழந்தைகள் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேயர் அறிவித்தார்.

தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில்தான் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவை மாநகராட்சியில் இயங்கும் 8 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற பரிந்துரைக்கப்படுவதாகவும் மேயர் வெங்கடாச்சலம் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+