தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக உள்ளது-நரேஷ் குப்தா
பென்னாகரம்: தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக இருக்கிறது என்று இடைத் தேர்தல் நடக்கவுள்ள பென்னாகரம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினா.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
திமுக சார்பில் இன்பசேகரனும், அதிமுக சார்பில் அன்பழகனும், பாமக சார்பில் தமிழ்குமரனும், தேமுதிக சார்பில் காவேரிவர்மனும் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளருக்காக மாநில அமைச்சரவையே பென்னாகரத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. பாமக வேட்பாளருக்காக அக் கட்சியின் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளருக்காக விஜய்காந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சுறுசுறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 25ம் தேதி வரையும், முதல்வர் கருணாநிதி வரும் 24ம் தேதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்றும், நாளையும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் விதிகளை மீறியதாக அனைத்துக் கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந் நிலையில் நரேஷ் குப்தா இன்று பென்னாகரம் வந்தார். தேர்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் நடவடிக்கைகள், புகார்கள், வழக்குகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சவாலாக இருக்கிறது-நரேஷ் குப்தா:
இதையடுத்து தேர்தல் நிலைக்குழு கூட்டம் நடந்தது. அதில் அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக பிரதிநிதியைத் தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் குப்தாவிடம் சரமாரியாக புகார்களைத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குப்தா, தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக இருக்கிறது. தேர்தல் விதிமுறை மீறல் குறித்து இதுவரை 87 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பணப்பட்டுவாடா குறித்து வாக்காளர்கள் யாரேனும் புகார் கொடுத்தாலோ, அல்லது பணப் பட்டுவாடாவின்போது அதிகாரிகள் கண்ணில் அது பட்டாலோ வழக்கை வலுவாக பதிய முடியும் என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications