பென்னாகரம் தேர்தல் விதிமீறல் - நடவடிக்கை எடுக்க நரேஷ்குப்தா உறுதி
தர்மபுரி: தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அமுதா முன்னிலையிலும் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின் நரேஷ்குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சி பிரநிதிகள் முன்வைத்த பிரச்னைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பெரும்பாலான கட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள், கூடுதலான வாகனத்தை பயன்படுத்துவதாகவும், தேர்தல் செலவுகள் அதிகமாக மேற்கொள்வதாகவும், கட்-அவுட், விளம்பரங்கள் அதிக அளவில் வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிக்க சிலர் பணம் கொடுக்க முயல்வதாகவும் கூறினர். இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போன்று வேட்பாளர்களின் செலவுகள் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளும் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர்களால் செலவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது.
இதேபோல், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications