சமையல் எரிவாயுக்கான மானியத்தை வாபஸ் பெற்றது டெல்லி காங். அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி காங்கிரஸ் அரசு தலைநகர மக்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.

சமையல் எரிவாயுக்கு அளித்து வந்த மானியத்தை (சிலிண்டருக்கு ரூ. 40) அது திரும்பப் பெற்றுள்ளது. இதனால் டெல்லி மக்கள் கூடுதல் விலையை கொட்டி அழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் விலை உயர்ந்த மொபைல் போன்கள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுக்கும் வரியை உயர்த்தி விட்டது ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு.

நேற்று டெல்லி சட்டசபையில் மாநில நிதியமைச்சர் ஏ.கே.வாலியா பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

தற்போது அங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 40 மானியம் கொடுத்து வருகிறது டெல்லி அரசு. அதைத்தான் தற்போது பிடுங்கி விட்டனர்.

இதுதவிர டீசல் விலையிலும் கையை வைத்து விட்டது காங்கிரஸ் அரசு. டீசல் விலையில் லிட்டருக்கு 12.5 சதவீதமாக இருந்து வாட் வரியை தற்போது 20 சதவீதமாக ஒரேயடியாக உயர்த்தி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+