ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - மே 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி நீதிபதி மல்லிகார்ஜுனய்யா வழக்கை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வெள்ளிக்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தொடர்புடைய 42 சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். அதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என கூறியிருந்தது.
மேலும், கடந்த 14 வருடங்களாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்குக்குத் தடை விதிக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது நினைவிருக்கலாம்.
மார்ச் 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் அரசுத் தரப்பில் உள்ள 42 சாட்சிகளையும், குறுக்கி விசாரணை செய்ய உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா. மார்ச் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை இது நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
இருப்பினும் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மே 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications