போலி மருந்து- 5 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: குப்பையில் கிடந்த காலாவதியான மருந்துகளை சேகரித்து விற்பனைக்கு அனுப்பி மோசடி செய்த வழக்கில் 5 பேருக்கு முன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் இடத்தில் வீசப்பட்ட மருத்துவக் கழிவில் இருந்து காலாவதியான மருந்துகளை சேகரித்து, அவற்றை புதுப்பித்து விற்பனைக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொடுங்கையூரைச் சேர்ந்த சுனிதா ராணி என்பவரின் உதவியோடு ஒரு கும்பல் காலாவதியான மருந்துகளை சேகரித்து கோயம்பேட்டில் உள்ள மருந்து கம்பெனிக்கு அனுப்பி, அங்கு மருந்துகளின் தேதியை மாற்றி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதில் கொடுங்கையூரைச் சேர்ந்த சுனிதா ராணி (வயது 29), மற்றும் மருந்து குடோனில் வேலை பார்த்த கிருபாகரன் (30), ராமகிருஷ்ணன் (35), விஜயகுமார் (34), கோவிந்தன் (29), ஜெகதம்மா (30), தர்மராஜன் (50) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனிதாராணி தவிர மற்ற அனைவரும் மருந்து குடோனில் பணி புரிந்தவர்கள்.
விஷயம் அறிந்ததும், மீனா ஹெல்த்கேர் மருந்து குடோனின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் தலை மறைவாகிவிட்டார்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் ஷாஜகான், 'இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டவர்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இவர்களுக்கு நீதிமன்றம் முன் பிணை வழங்கக் கூடாது' என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்-காவல்துறை:
இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள சைபர் குற்றவியல் துறை சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ஆணையர் ராஜேந்திர பேசுகையில், ஆபாச எஸ்எம்எஸ், இ-மெயில் தொடர்பான குற்றங்களை கண்டுபிடிப்பது கடினம். இக்குற்றங்களை கண்டுபிடிப்பது பற்றி மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் காலாவதியான மருந்து விற்கும் நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்.
போலி கிரிடிட் கார்டு, கடன் அட்டைகள் மலேசியாவில் இருந்துதான் இங்கு அதிக அளவில் வருவதை கண்டுபிடித்துள்ளோம்.
கோடை விடுமுறையையொட்டி மெரீனா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications