விமான பணி பெண்ணிடம் சில்மிஷம்-ஆசாமி கைது!
டெல்லி: சவுதியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமான பணிப் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட பயணி கைது செய்யப்பட்டார்.
சவுதியில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்த ஏர்-இந்தியா விமானத்தில் பயணம் செய்தவர் சுபாஷ் சந்திரா என்ற 36 வயது ஆசாமி.
இவர் நடுவானில், பயணத்தின் போது பணிப்பென் ஒருவரிடம் அத்துமீறி, அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த உடன் இருந்தவர்கள் சுபாஷ் சந்திராவை கண்டிக்க முற்பட்ட போது அவர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கிய உடனடியாக போலீசாரிடம் பணிப் பெண் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி சர்வதேச விமான நிலைய போலீசார் சுபாஷ் சந்திராவை கைது செய்தனர்.
சுபாஷ் சந்திரா ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications