மாமூல் கொடுக்காததால் இளைஞர் படுகொலை- ரவுடிகள் அட்டகாசம்
கூடுவாஞ்சேரி: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மாமூல் கொடுக்காததால் இளைஞரை படு கொலை செய்துள்ளது ஒரு ரவுடிக் கும்பல்.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையை சேர்ந்தவர் நிஜாம் முகைதீன். இவரது மகன் இப்ராகிம் என்கிற அப்பாஸ் (23). திருமணம் ஆகாதவர். ஜூஸ் கடை நடத்தி வந்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி அருண் குமார் என்பவனுக்கும்) முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு அப்பாஸ் பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
அப்போது அருண்குமார் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்ததில் அப்பாஸ் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கோவிந்த ராஜன், பூபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நடந்த 3 மணி நேரத்தில் அருண்குமார் அவனது கூட்டாளிகள் சரவணன், பிரசன்னா, செல்வமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மாமூல் கொடுக்க அப்பாஸ் மறுத்ததே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் தந்தை ஜார்ஜ் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் துணைத் தலைவர் ஆவார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications