மாமூல் கொடுக்காததால் இளைஞர் படுகொலை- ரவுடிகள் அட்டகாசம்
கூடுவாஞ்சேரி: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மாமூல் கொடுக்காததால் இளைஞரை படு கொலை செய்துள்ளது ஒரு ரவுடிக் கும்பல்.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையை சேர்ந்தவர் நிஜாம் முகைதீன். இவரது மகன் இப்ராகிம் என்கிற அப்பாஸ் (23). திருமணம் ஆகாதவர். ஜூஸ் கடை நடத்தி வந்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி அருண் குமார் என்பவனுக்கும்) முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு அப்பாஸ் பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
அப்போது அருண்குமார் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்ததில் அப்பாஸ் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கோவிந்த ராஜன், பூபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நடந்த 3 மணி நேரத்தில் அருண்குமார் அவனது கூட்டாளிகள் சரவணன், பிரசன்னா, செல்வமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மாமூல் கொடுக்க அப்பாஸ் மறுத்ததே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் தந்தை ஜார்ஜ் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் துணைத் தலைவர் ஆவார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications