For Daily Alerts
Just In
புதுச்சேரி சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் 2010 -11 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஆளுநர் இக்பால் சிங் உரையைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இதனையடுத்து கடந்த 19ம் தேதி சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் நாளை (வியாழக்கிழமை) சட்டசபை கூடுகிறது.
நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் வைத்திலிங்கம் காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கையைப் போல இந்த பட்ஜெட்டும் வரி இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Story first published: Wednesday, March 24, 2010, 14:15 [IST]