பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொண்டதால் மாணவன் தீக்குளித்து சாவு

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்: பெற்றோர் சண்டையால் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான். காப்பாற்ற முயன்ற தந்தை காயமடைந்தார்.

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கபத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற மாணிக்கம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களது மகன் வேல்குமார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

மாணிக்கத்திற்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீ்ட்டில் மனைவியுடன் தகராறு செய்வாராம். நேற்று நள்ளிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதை வேல்குமார் பார்த்து சத்தம போட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் சண்டையை நிறுத்தவில்லை.

இதனால் மனமுடைந்த அவன் திடீரென ஆவேசத்துடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். இதை பார்த்த அவரது தந்தை மாணிக்கம் மகனை காப்பாற்ற முயற்சித்தார். இதில் இருவரும் கருகினர்.

நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் வேல்குமார் இறந்து விட்டார். அவரது தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தட்டார்மடம் எஸ்ஐ பாமாபத்மினி விசாரித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+