தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் - மாற்றக் கோரி பிஷப் அலுவலகம் முற்றுகை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணலை பிரிப்பதில் பெருமளவில் ஊழல் செய்ததாக பாதிரியார் மீது குற்றம் சாட்டிய கிராம மக்கள், அவரை மாற்றக் கோரி பிஷப் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டம் கொட்டில்பாடு சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ராபின்சன். இவர் தாது மணலை பிரித்து எடுப்பதில் பெருமளவில் ஊழல் புரிந்ததாக அக்கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து ராபின்சனை உடனடியாக மாற்றக் கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள பிஷப் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து பிஷப் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தனர்.
பாதிரியார் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிஷப் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது.












Click it and Unblock the Notifications