குளச்சலில் டல்லடிக்கும் சீசன்- மீனவர்கள் பெரும் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

Fish
குளச்சல்: குளச்சலில் மீன்பிடி சீசன் டல்லடித்து வருவதால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீன் விற்பனை கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீன்பிடி இறங்கு தளங்கள் உள்ளன. பல இடங்களில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.

மீன்பிடி சீசன் இல்லாத போது கேரளா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குமரி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பல மாதங்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.

குளச்சல் இயற்கை துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் விசைப்படகுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். செந்நவரை என்ற கிளிமீன், ரெட்ரிங் எனப்படும் சிவப்பு இறால், கணவாய் வகைகள், நாக்கண்டம் மீன் உள்ளிட்ட பல்வேறு மீன்கள் விசைப்படகு மூலம் பிடிக்கப்பட்டன.

இம்மீன்களை கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும், வெளிமாவட்ட வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வர். இதில் சிலவகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒரு விசைப்படகில் 10 முதல் 15 பேர் வரை கடலில் சென்று 15 முதல் 20 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து வர சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. தற்போது கேரை மீன் சீசன் ஆகும். அதிக அளவு கேரை மீன்கள் கிடைக்க வேண்டும்.

ஆனால் சீசன் டல் அடித்து விட்டதால் குளச்சல் கடற்கரை அருகே அமைந்துள்ள மீன் விற்பனை கூடம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கில் பண செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+