பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி- புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் புறக்கணிப்பு
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் இல்லாதவர்கள், அன்றைய தினம் எங்களுக்கு ஆதரவாக மையங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பர்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வாகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில், 10 சதவீதத்தை பறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் முழுவதையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இடைநிலை கல்வி என்றும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களை மேல்நிலை கல்வி என்று தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட எங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications