சென்னையில் தேசிய கடலோர மேலாண்மை மையம் - ரூ. 166 கோடியில் அமைகிறது
டெல்லி: சென்னையில் ரூ. 166 கோடியில் தேசிய கடலோர மேலாண்மை மையத்தை மத்திய அரசு அமைக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில்,
நாடு முழுவதும் உள்ள 7,500 கிலோ மீட்டர் தூர கடலோர பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பு, கடல் சீற்றம் மற்றும் கடல் அலை தாக்குதல் ஆகியவற்றால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தகுந்த வாழ்வியல் சூழலை உருவாக்கித் தருவது, கடலோர பகுதியில் உள்ள ஈரப்பத நிலங்களை பாதுகாப்பது, கடல் நீர் மாசுபடுவதை தடுப்பது போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கடலோர பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் பேர் நேரடியாகவும், 6 கோடி பேர் மறைமுகமாகவும் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ், மாங்குரோவ் காடுகளின் எல்லை பகுதியை நிர்ணயம் செய்வது, பவளப் பாறைகளை பாதுகாப்பது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஆயிரத்து 156 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை திட்டத்திற்கு 897 கோடி ரூபாயை உலக வங்கி கடனாக வழங்கும். மீதித் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
தமிழ்நாட்டில் பிச்சாவரம் மற்றும் மன்னார் வளைகுடா, மேற்கு வங்காளத்தில் சுந்தர்பன், கேரளாவின் வேம்பநாடு உள்ளிட்ட 7,500 கி.மீ. தூர கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தும்.
ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக 166 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றார்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு











Click it and Unblock the Notifications