Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி மருந்து மோசடி- தலைமறைவான நிறுவன அதிபர் கோர்ட்டில் சரண்

Subscribe to Oneindia Tamil

Meenakshi Sundaram
சென்னை: காலாவதியான மருந்துகள் விற்பனை மோசடியில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மீனா ஹெல்த் கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காலாவதி மருந்து மோசடி வழக்கில் இதுவரை ஜெகதாம்மாள்,​​ சுதாராணி,​​ கிருபாகரன்,​​ ராமகிருஷ்ணன்,​​ விஜயகுமார்,​​ கோவிந்தன்,​​ தர்மராஜன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை கைதானார்கள்.

காலாவதி மருந்துகளை சப்ளை செய்த்தாக கூறப்படும் மீனா ஹெல்த் கேர் நிறுவனத்தின் சின்மயா நகர் அலுவலக வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தி ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து தலைமறைவான மீனா ஹெல்த்கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி சாத்தம்மாள் மற்றும் சேகர், பிரதீப் சோர்டியா, பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில், ரவி, வெங்கடேசன் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்து விட்டனர். இந்த நிலையில்தான் முக்கியப் புள்ளியான பிரதீப் சோர்டியாவை நேற்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

சொந்த மாநிலமான ராஜஸ்தான் போய் விட்டு டெல்லி வழியாக சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து போலஸார் சோர்டியாவை அமுக்கினர்.

இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடிவந்த மீனாட்சி சுந்தரம் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மீனாட்சி சுந்தரத்தின் தம்பி மாணிக்கமும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று பிரதீப் சோர்டியா மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் சகோதரர் மாணிக்கத்துக்குச் சொந்தமான இடங்களில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.

மாணிக்கத்துக்கு சொந்தமாக புரசைவாக்கம் நியூ மாணிக்கம் தெருவில் இருந்த வசந்தா மருந்து நிறுவனம்,​​ சபரி பார்மஸி ஆகியவற்றை போலீஸார் சோதனை செய்தனர். இறுதியில்,​ வசந்தா மருந்து நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல, சோர்டியாவுக்குச் சொந்தமான அரும்பாக்கம் அப்துல் ரசாக் கார்டனில் உள்ள ஜிஎச் ஃபார்மா,​​ எஸ்பிஐ காலனியில் உள்ள குருதேவ் பார்மஸி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

இங்கு மட்டும் ரூ. 1 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் சிக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காலாவதி மருந்துகள் மோசடி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில்,

காலாவதியான மருந்துகளை மறுவிற்பனைக்கு அனுப்பிய மோசடி தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மருந்துக் கிடங்குகள்,​​ மொத்த விற்பனை வளாகங்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் இதில் தொடர்புள்ள வேறு சில நபர்களை கைது செய்ய 60 பேர் அடங்கிய 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிமாநில தொடர்புகள் இருப்பதால் 2 தனிப்படைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளன என்றார் கமிஷனர் ராஜேந்திரன்.

ஒரு பார்மசிஸ்ட் பெயரில் பல கடைகள்:

இதற்கிடையே ஒரு பார்மசிஸ்ட் பெயரில் பல்வேறு கடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் எச்சரித்துள்ளார்.

அவர் கூறுகையில், மருந்துக் கடைகளை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்.​ ஆனால் அந்த மருந்துக் கடைகளில் முறையான மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும்.

பல கடைகள் ஒரே மருந்தாளுரின் பெயரில் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.​ அவ்வாறு செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டுகள் யாருக்கும் புரிவதில்லை என்று கூறப்படுகிறது.​ அந்த மருந்துச் சீட்டு மருத்துவரும்,​​ மருந்து கடைக்காரர்களும் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் இப்போது 50 மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் மூலம் மருந்துச் சீட்டு வழங்கப்படுகிறது.​ இரண்டு ஆண்டுகளில் அனைத்து மருத்துவர்களும் கம்ப்யூட்டர் மூலம் மருந்துச் சீட்டு கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 42,500 மருந்துக் கடைகள் உள்ளன.​ இவர்களிடம் காலாவதியான மருந்து குறித்து சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தமிழகத்தில் மருந்து நிறுவனங்கள்,​​ மருந்துக் கடைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை வளரவில்லை.​ இப்போது 50 மருந்துக் கட்டுப்பாடு ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.​ கூடுதலாக 25 ஆய்வாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் சுப்புராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+