அரசுப் பேருந்தை கடத்தி ஓட்டி பூ விற்ற பெண்ணை படுகாயப்படுத்தியவர் கைது
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தை மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாறுமாறாக ஓட்டிச் சென்று மோதியதில் பூ விற்ற பெண் சிக்கி படுகாயமடைந்தார்.
சென்னை பாடியிலிருந்து பிராட்வே வரையிலான அரசு நகரப் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் நேற்று பிராட்வே பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு டீ சாப்பிடச் சென்றார்.
அப்போது ஒரு மர்ம நபர் திடீரென பஸ்சுக்குள் ஏறி அதை செலுத்த்த் தொடங்கினார். தாறுமாறாக பஸ்சை ஓட்டிய அவர் சாலையோரம் பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண் மோதி பஸ்சை நிறுத்தினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து ஊழியர்களும் விரைந்து வந்து பஸ்சுக்குள் பாய்ந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்ப்ப்பட்டார். பஸ்சை ஓட்டிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications