புலிகள் வைத்திருந்த இரணமடு விமான தளம் இலங்கை விமானப்படையின் பயிற்சி வளாகமாகிறது
Subscribe to Oneindia Tamil

வடக்கு இலங்கையில் இரணமடு என்ற இடத்தில் வனப்பகுதிக்குள் அருமையான விமானதளத்தை ஏற்படுத்தியிருந்தனர் விடுதலைப் புலிகள். இங்கிருந்துதான் அவர்களின் விமானப்படை செயல்பட்டு வந்தது. இங்கிருந்து கிளம்பிச் சென்ற குட்டி விமானங்கள்தான் கொழும்பு நகரைச் சுற்றிலும் பலமுறை தாக்குதல் நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தன.
உலகிலேயே வான் வழித் தாக்குதலை நடத்திய போராளி இயக்கம் என்ற பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்த இந்த விமானதளம் தற்போது இலங்கை விமானப்படையின் ஆய்வு மற்றும் பயிற்சி வளாகமாக மாறப் போகிறதாம்.
இதுகுறித்து இலங்கை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் ஜியோகிராபிகல் தகவல் அமைப்பின் தலைவர் இந்திரசிரி என்பவர் கூறுகையில், இங்கு மிகப் பெரிய விமான ஆய்வு மற்றும் பயிற்சி வளாகம் அமையவுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications