அரசியல் மோதலில் நூலகத்திற்குத் தீவைப்பு - 20,000 நூல்கள் சாம்பல்
பெங்களூர்: பெங்களூரில் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அறக்கட்டளையின் நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் எரிந்து சாம்பலாகின.
அந்த அறக்கட்டளையின் உரிமையாளர் மஞ்சுநாத். பாஜகவைச் சேர்ந்தவர். இவரது அறக்கட்டளை அலுவலகத்தில் ஒரு நூலகம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் அலுவலகத்தில் சிலர் தீவைத்து விட்டு ஓடியுள்ளனர். இதில் நூலகத்தில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் சாம்பலாகி விட்டன.
2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
இதுகுறித்து போலீஸில் மஞ்சுநாத் கொடுத்துள்ள புகாரில், பத்மநாபா நகர் வார்டு தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அஞ்சனப்பா என்பவர்தான் தீவைப்புக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications