தமிழகம் முழுக்க 2 மணிநேர மின்வெட்டு இருப்பது உண்மையே! - மின்வாரியம்
சென்னை: மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு இருப்பது உண்மைதான் என்று மின் வாரியத் தலைவர் சி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி. சிங் கூறியதாவது:
தேவையைக் கருத்தில் கொண்டு, மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு, 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்படுவது உண்மைதான்.
இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு, கோடை காலத்தில் உயர்த்தப்படாது. இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும். மே 15-ம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதன்பிறகு மின் பற்றாக்குறை ஓரளவு குறையும்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக, டபிள்யு.டபிள்யு.எப் இந்தியா என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (மார்ச் 27) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் தேவையற்ற விளக்குகளை அணைத்து, ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்," என்றார்.
வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்
இந்த சந்திப்பில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பேசியது:
"தேசிய வன கொள்கையின் படி நிலப் பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம், கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது. இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு, வனப் பகுதியாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, 2010 -11 நிதியாண்டில் ரூ. 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications