இளம்பெண் பலாத்காரம்: 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
நெல்லை: திசையன்விளையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லையில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.
திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரை கடந்த 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி திசையன்விளையை சேர்ந்த கார்த்தீசின், சித்திரைபாண்டி, ராஜலிங்கம் ஆகியோர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தை சுற்றி பார்க்க அழைத்து சென்றனர்.
அங்கு சரோஜாவை மூவரும் பலாத்காரம் செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ராஜன், ராஜபாண்டி, செல்வன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
இதுகுறித்து சரோஜா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கார்த்தீசன், சித்திரைபாண்டி, ராஜலிங்கம் ஆகியோர் மீது பலாத்கார வழக்கும் மற்ற மூன்று பேர் மீது பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி காமத் விசாரித்து 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையில் மொத்தம் ரூ.5 ஆயிரம் விதம் ரூ.30 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications