சத்யேந்திர துபே கொலை: குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பொறியாளர் சத்தியேந்திர துபே.
இவர் கடந்த 2003ம் ஆண்டில் பீகாரில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஊழல் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து ஆதாரப்பூர்வமாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார்.
துடிப்பும், நேர்மையும் கொண்ட இளம் பொறியாளரான இவர் ஊழலை அம்பலப்படுத்திய காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி வாரணாசியில் இருந்து ரயிலில் வந்திறங்கி வீட்டிற்கு செல்லும் வழியில் கயாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வந்தனர். பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாந்துகுமார், உதய்குமார் மற்றும் பிங்கு ரவிதாஸ் ஆகிய மூன்று பேரையும் குற்றவாளிகள் என கடந்த 23ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகவேந்திர சிங் அறிவித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராவேந்திர சிங் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications