காலாவதி மருந்து விற்பனை மோசடி - இதுவரை 10 பேர் கைது - ரூ. 5.5 கோடி மருந்துகள் பறிமுதல்
சென்னை: காலாவதியான மருந்துகளை விற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைதாகியுள்ளதாகவும், ரூ. 5.5 கோடி மதிப்பிலான காலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காலாவதி மருந்து விற்பனை வழக்கு தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளோம். 4 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இதற்காக 13 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த வழக்குக்கென்றே தனியாக பணியாற்றுகின்றனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்ய வேண்டியதுள்ளது. அதற்கு இன்னும் அவகாசம் தேவை. இதுவரை ரூ.5.50 கோடி அளவுக்கு மருந்துகளை கைப்பற்றி இருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
சென்னையை பாதுகாப்பதற்கு நாங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கூடுதலாக பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது, மக்கள் கூடும் பகுதிகளாக விளங்கும் ஆஸ்பத்திரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தீ தடுப்பு சாதனங்கள், எலக்ட்ரானிக் அலாரம், கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் கட்டாயம் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.
பாதுகாப்பு விவகாரத்தில் பெரிய நிறுவனங்களுக்கென்று 15 பேரைக் கொண்ட தனிக் குழுக்களையும், சிறு வணிகர்களுக்கான தனி குழுக்களையும் உருவாக்க இருக்கிறோம். இவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள் என்றார் ராஜேந்திரன்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications