தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டில் பாஜக முன்னணிக்கு வரும் - பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
விருதுநகர்: அகில இந்திய கட்சியான காங்கிரஸை தமிழகத்தில் திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். கட்சித் தலைமையின் இந்த போக்கைப் பற்றி மாநிலத்தில் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
விருதுநகர் தெப்பம் வடக்கு பஜாரில் நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
அகில இந்திய கட்சியான காங்கிரஸை தமிழகத்தில் திமுகவிடம் அகில இந்திய தலைமை அடமானம் வைத்து விட்டது. இது பற்றி மாநிலத்தில் யாரும் கவலப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் உயிரைக் காக்க வேண்டிய மருந்து காலாவதியான பின்பும் விற்கப்படும் கொடுமை நடந்துள்ளது. இத்தனை நாள் அரசு என்ன செய்து கொண்டு இருந்தது.
சிறுபான்மை குழந்தைகளுக்கு மட்டும் தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றது. பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
காமராஜர் ஏழை, பணக்காரர் என்று பார்க்காமல் கல்வியை வழங்கினார். அதனால்தான் கல்விக்கண் திறந்த தந்தை என்கின்றோம்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக முதல் நிலைக் கட்சியாக மாறும். தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications