எஸ்ஐடி விசாரணை நெருக்கடிக்கு மத்தியிலும் ஹாயாக ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்த மோடி
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான எஸ்ஐடியின் விசாரணைக்காக பத்து மணி நேரம் தீவிரமாக விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி படு கூலாக இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்ற குஜராத் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இரவில் அகமதாபாத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைக் கண்டு களித்தார்.
பத்து மணி நேர விசாரணையின் எந்தவித பாதிப்பும் மோடியிடம் தெரியவில்லை. மாறாக படு ஹாயாக அவர் காணப்பட்டார். மோடி வருகையைத் தொடர்ந்து போட்டி நடந்த சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எஸ்ஐடி விசாரணை மிகவும் கடினமான நேரம்
இதற்கிடையே, எஸ்ஐடி விசாரணைக்காக நீண்ட நேரம் அமர்ந்திருந்ததுதான் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரம். இருப்பினும் எனக்கு இந்த சமயத்தில் துணையாக நிற்கும் குஜராத் மக்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
எஸ்ஐடி விசாரணை குறித்து தனது பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி. அதில், சட்ட நடைமுறைகளுக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அதன் உயர் தன்மைக்கு மதிப்பு அளித்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் எனக்குத் துணை நிற்கும், எனக்காக பிரார்த்திக்கும் குஜராத் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
கடந்த எட்டு வருடங்களாக மீடியாதான் என்னை இருட்டில் வைத்திருக்கிறது. உண்மையில் பார்த்தால் மீடியாதான் என்னை கடந்த எட்டு வருடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.
என்னைப் பற்றி கடந்த எட்டு வருடங்களாக வதந்திகளைப் பரப்பி்க் கொண்டிருப்போர், அதை நியாயப்படுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு நல்ல புத்தியைத் தர வேண்டும் என கடவுளை கேட்டுக் கொள்கிறேன். சட்டமே இறுதியில் வெல்லும். அதற்குரிய சூழலை உருவாக்க பாடுபடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோடி.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications