எஸ்ஐடி விசாரணை நெருக்கடிக்கு மத்தியிலும் ஹாயாக ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்த மோடி
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான எஸ்ஐடியின் விசாரணைக்காக பத்து மணி நேரம் தீவிரமாக விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி படு கூலாக இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்ற குஜராத் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இரவில் அகமதாபாத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைக் கண்டு களித்தார்.
பத்து மணி நேர விசாரணையின் எந்தவித பாதிப்பும் மோடியிடம் தெரியவில்லை. மாறாக படு ஹாயாக அவர் காணப்பட்டார். மோடி வருகையைத் தொடர்ந்து போட்டி நடந்த சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எஸ்ஐடி விசாரணை மிகவும் கடினமான நேரம்
இதற்கிடையே, எஸ்ஐடி விசாரணைக்காக நீண்ட நேரம் அமர்ந்திருந்ததுதான் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரம். இருப்பினும் எனக்கு இந்த சமயத்தில் துணையாக நிற்கும் குஜராத் மக்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
எஸ்ஐடி விசாரணை குறித்து தனது பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி. அதில், சட்ட நடைமுறைகளுக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அதன் உயர் தன்மைக்கு மதிப்பு அளித்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் எனக்குத் துணை நிற்கும், எனக்காக பிரார்த்திக்கும் குஜராத் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
கடந்த எட்டு வருடங்களாக மீடியாதான் என்னை இருட்டில் வைத்திருக்கிறது. உண்மையில் பார்த்தால் மீடியாதான் என்னை கடந்த எட்டு வருடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.
என்னைப் பற்றி கடந்த எட்டு வருடங்களாக வதந்திகளைப் பரப்பி்க் கொண்டிருப்போர், அதை நியாயப்படுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு நல்ல புத்தியைத் தர வேண்டும் என கடவுளை கேட்டுக் கொள்கிறேன். சட்டமே இறுதியில் வெல்லும். அதற்குரிய சூழலை உருவாக்க பாடுபடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோடி.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications