ராமேஸ்வரத்தில் திடீர் கன மழை- தனுஷ்கோடி அருகே மின்னலுக்கு சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை நிலவியது.
தமிழகம் முழுவதும் கடும் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் திடீரென கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவியது.
இதற்கிடையே தனுஷ்கோடி அருகே தாவுக்காடு என்ற மீனவ கிராமத்தில், மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுமி பலியானாள்.












Click it and Unblock the Notifications