Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரதட்சணைக் கொடுமை - மாமனார், மாமியார், நாத்தனார் கைது- கணவர் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவர் தலைமறைவாகி விட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண் அகர்வால். இவரது மகள் பிரியா அகர்வால் (23). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ரவீந்தர் அகர்வால் மகன் சுனில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ரவீந்தர் அகர்வால் ஜவுளிக் கடை அதிபராவார்.

ரூ. 5 கோடி செலவில் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார் அருண் அகர்வால். திருமணத்துக்குப் பின் பிரியா அகர்வால் ஆந்திராவில் கணவர் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் பிரியாவிடம் அவரது மாமனார் குடும்பத்தினர் ரூ. 2 கோடி வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களது கொடுமை தாங்க முடியாமல் பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், வரதட்சணை கொடுமை குறித்து தனது பெற்றோருடன் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஆந்திரா விரைந்தனர். அங்கு ரவீந்தர் அகர்வால், மாமியார் வந்தனா, நாத்தனார் ஷில்பா ஆகியோரைக் கைது செய்தனர். சுனில் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+