சென்னை-செஙகோட்டை சிறப்பு ரயிலில் மே 16 வரை இடமில்லை

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: சென்னை-செங்கோட்டை கோடை கால சிறப்பு ரயிலில் வரும் மே 16ம் தேதி வரை இடமில்லை. இதனால் இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் இருந்து செங்கோட்டை வரை, திருச்சி, மதுரை, சிவகாசி வழியாக இரு மார்க்கத்திலும் வரும் ஏப் 3ம் தேதி முதல் கோடை கால வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.25க்கு சிவகாசி வரும். 10.25க்கு செங்கோட்டையை அடையும்.

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் செங்கோட்டையில் மதியம் 2.30க்கு புறப்படும். மாலை 4.40க்கு சிவகாசி வரும். இந்த ரயில் மறுநாள் காலை 4.15க்கு சென்னை எழும்புரை வந்தடையும்.

இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், திரி டயர் ஏசி கோச் 2, ஆன் ரிசர்வ் பெட்டிகள் 4, டூ டயர் ஏசி கோச் 2 இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. நேற்றைய
நிலவரப்படி இந்த ரயிலில் வரும் மே 16ம் தேதிவரை முன்பதிவு கட்டண டிக்கெட்டுகள் எதுவும் இல்லை.

ஏப்ரல் மாதத்தில் காத்திருப்போர் பட்டியலில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். மே மாதம் காத்திருப்போர் பட்டியலில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். மே 16ம் தேதிக்கு பின்னர் இரு மார்க்கத்திலும் படுக்கை வசதியுடன் கூடிய இடங்கள் உள்ளன.

சென்னையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் தினசரி பொதிகை ரயிலிலும் கோடை காலத்தில் இடம் இல்லை. எனவே சிறப்பு ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+