முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

விக்கிரமசிங்கபுரம் (நெல்லை) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக காப்பக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், கோடை கால வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் தீப்பிடிக்காமல் தடுப்பதற்காக களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் ஏப் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மூடப்படுகிறது.

ஆனால் சுற்றுலா தலமான அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், களக்காடு தலையணை பகுதி, நம்பி கோயில் ஆகிய இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் முன்னேச்சரிக்கை மற்றும் தீவிர கட்டுபாட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.

மாஞ்சோலை, செங்கல்தேரி ஆகிய இடங்களுக்கு அனுமதியில்லை. தீத்தடுப்பு ரோந்து பணியினர் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட வனப்பகுதியை பாதுகாத்து வருவார்கள். தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் பொதுமக்கள் நுழைந்தால் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நாளை ஒருநாள் மட்டும் முண்டந்துறையில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் 120 வனப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+