மும்பை தீவிரவாதத் தாக்குதல்: கசாப் மீதான வழக்கின் விசாரணை முடிந்தது-மே 3ல் தீர்ப்பு

மும்பை, ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்ட தனி கோர்ட்டில், பலத்த பாதுகாப்புடன் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று அரசுத் தரப்பு மற்றும் கசாப் தரப்பு வக்கீல்களின் இறுதி வாதங்கள் நடந்தன.
அதன் பின்னர் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தஹிளியானி அறிவித்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 653 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக உஜ்வால் நிகாம் ஆஜராகினார். கசாப் தரப்பில் பல வக்கீல்கள் நியமிக்கப்பட்டு நீக்கப்பட்டு வந்தனர். கடைசியாக வாதாடியவர் கே.பி.பவார்.
வழக்கு குறித்து உஜ்வால் நிகாம் கூறுகையில், ஒட்டுமொத்த வழக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றார்.
பவார் கூறுகையில், முடிந்த வரை சிறப்பான முறையில் வாதாடி கசாப் தரப்பு நியாயத்தை நீதிபதி முன் எடுத்து வைத்துள்ளேன். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பதிவான வீடியோ காட்சியில் இருப்பது கசாப் அல்ல என்றும் எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட கசாப்பின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்டுள்ளன என்றார்.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மொத்தம் 10 தீவிரவாதிகள் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். இவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்ட்டு விட்டனர்.
மும்பையின் பல முக்கியப் பகுதிகளை குறி வைத்து தீவிரவாதிகள் 3 நாட்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் வெளிநாட்டினர் ஆவர். இதை உலகமே டிவிகள் மூலம் நேரடியாக பார்த்து அதிர்ந்தது என்பது நினைவிருக்கலாம்.
விசாரணையின்போது கசாப் தனது வாக்குமூலங்களை மூன்று முறை மாற்றிக் கூறினான். சினிமாவில் நடிக்க வந்தேன் என்று ஒருமுறை கூறினான். இவ்வாறு மாறி மாறி புதுப் புதுப் கதைகளை விட்டான்.
2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அவன் அளித்த வாக்குமூலத்தின்போது, நான் சம்பவம் நடந்த அன்று கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன்பே என்னைக் கைது செய்தனர் என்று கூறினான்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications