பெட்ரோல், டீசல்: இன்றிரவு முதல் லிட்டருக்கு 50 பைசா உயர்கிறது
டெல்லி: சென்னை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் இன்றிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்கிறது.
டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ, கான்பூர், ஆக்ரா, அகமதாபாத், புனே, சோலாப்பூர், சூரத் ஆகிய 13 நகரங்களில் நாளை முதல் 'யூரோ-IV' தரம் கொண்ட தூய எரிபொருள் வினியோகம் தொடங்கப்பட உள்ளது.
ஐரோப்பிய மாசு கட்டுப்பாட்டு தர நிர்ணயப்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த இந்த 'யூரோ-IV' எரிபொருள் வினியோகத்துக்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிட்டுள்ளன.
இந்த கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில் இந்த 13 நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்படுகிறது.
இதேபோல் இந்தியாவின் இதர நகரங்களில் எரிபொருள் வினியோகம் தற்போது பயன்பாட்டில் உள்ள யூரோ-II தரத்தில் இருந்து, யூரோ-IIIக்கு மேம்படுத்தப்பட உள்ளது.
யூரோ-III வினியோகிக்கப்படும் நகரங்களில் பெட்ரோல் விலை 26 பைசாவும், டீசல் விலை 21 பைசாவும அதிகரிக்கும்.
இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சம் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து விலையேற்றத்துக்கான ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று இரவு முதல் அந்தந்த நகரங்களில் விற்கப்படும் விலைக்கு கூடுதலாக 21 பைசா முதல் 50 பைசா வரை பெட்ரோல், டீசல் விற்பனையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications