தொட்டில் குழந்தை திட்டத்தில் 121 குழந்தைகள் மரணம் - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு !
மதுரை: தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 121 பெண் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். இது இயற்கை மரணமா அல்லது யாராலும் கொல்லப்பட்டனரா என்பது பற்றி தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பென்னாகரத்தில் எதிர்கட்சிகளின் ஓட்டுக்களை விட திமுக மூன்றாயிரம் ஓட்டுக்கள் குறைவாகவே பெற்றுள்ளது.
பொது தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் திமுகவை தோற்க்கடிக்கலாம்.
தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 121 பெண் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
இது இயற்கை மரணமா அல்லது யாராலும் கொல்லப்பட்டனரா என்பது பற்றி தமிழக அரசு விரவான விசாரணை நடத்த வேண்டும். இதற்காக பாஜக பொது அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தும்.
மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களில் போலீசார் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது என்றார்.












Click it and Unblock the Notifications