நித்தியானந்தா தலைமறைவால் வெறிச்சோடிய ஆசிரமங்கள் – அன்னதானம் நிறுத்தம்
பெங்களூர்: நித்தியானந்தாவின் ஆசிரமங்களில் அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆசிரமங்களும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன.
நடிகை ரஞ்சிதாவுன் அந்தரங்க கோலத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். ரஞ்சிதாவும் எங்கே என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமங்களில் அமல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
நித்தியானந்தாவுக்கு பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமம் உள்ளது. இதுதவிர திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளிலும் ஆசிரமக் கிளைகள் உள்ளன.
தற்போது இந்த ஆசிரமஙகள், தியான பீடங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. யாரும் வருவதில்லை என்பதால் படு பிசியாக இருந்து வந்த இவை அனைத்தும் தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஆசிரமங்களில் முக்கால்வாசிப் பேர் வெளியேறி விட்டனர். சொற்ப எண்ணிக்கையிலானோர் மட்டுமே தங்கியுள்ளனர். மிகவும் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். பூஜைகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
லும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் நிறுத்தப்பட்டு விட்டது. மொத்தத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமங்கள், தியான பீடங்கள் அனைத்தும் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications