கோவை ஹோட்டலுக்கு அல் கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அல் கொய்தா அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கோவையில் வருகிற ஜூன் மாதம் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்குள்ள பல்வேறு ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவை புக் செய்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக இப்போதே பல்வேறு உயர் போலீஸ் அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் வந்துள்ள அந்த இமெயிலில், 'எங்களது ஹிட்லிஸ்ட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். எங்கள் செயலுக்கு நீங்கள் உதவ வேண்டும். அப்படி மறுக்கும் பட்சத்தில், அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். உங்கள் ஹோட்டல் வெடி வைத்து தகர்க்கப்படும் என வாசகம் இருந்த்து.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குத் தகவல் தரப்பட்டது. புகரைப் பெற்ற போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications