சிவகங்கையில் பிஎஸ்என்எல் 3ஜி சேவை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை உள்ளிட்ட 38 நகரங்களில் பி.எஸ்.என்.எல் சார்பில் செல்போன் சேவையில் 3ஜி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் திருநாவுக்கரசு சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
'பி.எஸ்.என்.எல் மொபைல்களில், 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை சேவையை பெறுபவர்கள் முகம் பார்த்து மற்றவர்களுடன் பேசலாம்.
இந்த வசதி தமிழகத்தில் 38 நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சிவகங்கை, காரைக்குடி ஆகிய நகரங்களிலும் செயல்படத் துவங்கியுள்ளது.
சிவகங்கையில் முதல்கட்டமாக 3,000 வாடிக்கையாளர்களுக்கும், காரைக்குடியில் 9,000 வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.












Click it and Unblock the Notifications