மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து தருக – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்களுக்கும், தலித் அந்தஸ்து தரப்பட வேண்டும். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது:
தொடக்கத்தில், அரசியல் சட்டத்தின் (தாழ்த்தப்பட்டோர்) 3வது பாராவில், இந்து மதத்திலிருந்து வேறு மாத்த்திற்கு மாறிய எந்த தலித் வகுப்பைச் சேர்ந்தவரும், அதே தலித் வகுப்பினராக கருதப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. பின்னர் அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சீக்கிய, புத்த மதத்தைச் சேர்ந்த தலித்கள், தலித்களாக அந்தஸ்து அளிக்கப்பட்டனர்.
ஆனால் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள், எந்த மத்த்தைச் சேர்ந்தவர்கலாக இருந்தாலும் ஒரே மாதிரியாக கருதப்பட வேண்டும். ஒரே மாதிரியாக அவர்களுக்கு எஸ்.சி என்ற அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதுதான் அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் இருக்கும்.
எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட வேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து கிடைக்க வழி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications