தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜூலையில் ஓய்வு பெறுகிறார்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஏழாண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
2006 தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அதோடு 12 இடைத்தேர்தல்களையும் நடத்தி உள்ளார்.
தேர்தல் நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப முறையாக பயன்படுத்தி உள்ளார் நரேஷ்குப்தா.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றையும் திறம்பட மேற்கொண்டவர் என்று புகழப்படும் நரேஷ்குப்தா, மிகவும் எளிமையானவர் என எல்லோராலும் அறியப்படுபவர்.
ஆடம்பரங்களில் நம்பிக்கை இல்லாத இவர் புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். வரும் ஜூலை மாதம் ஓய்வு பெற உள்ள நரேஷ்குப்தா, அதன் பின்னரும் சென்னையிலேயே தங்கி இருக்க விரும்புவதாக கூறுகிறார்.
ஓய்வு காலத்தில் மக்களுக்கு பயனுள்ள புத்தகங்களை எழுதப்போவதாக நரேஷ் குப்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications