கடலூரில் ரூ.20 லட்சம் போலி மருந்து பறிமுதல்
கடலூர்: கடலூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான போலி இருமல் மருந்துகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த செல்வவிநாயகா ஏஜென்சியின் உரிமையாளர் வள்ளியப்பனை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர் போலி மருந்துகளை விற்று வந்ததாக தெரிய வந்த்து.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமளவிலான போலி மருந்துகள், புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்த்து.
இதையடுத்து புதுச்சேரி மாநிலம் மெத்தப்பாக்கம் என்ற இடத்திலும், கடலூர் அருகிலும் போலீஸார் அதிரடி வேட்டையை நடத்தினர். அப்போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள போலி இருமல் மருந்துகள் பெட்டி பெட்டியாக சிக்கின. மேலும், போலி மருந்து பாட்டில்களில் ஒட்டப் பயன்படும் லேபிள்களும் கத்தை கத்தையாக சிக்கின.
தொடர்ந்து வள்ளியப்பனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications