இந்தியன் வங்கித் தலைவராக டிஎம் பாசின் பதவி ஏற்பு!

இதற்கு முன் இந்தப் பதவியிலிருந்து எஸ் சுந்தரராஜன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பாசின் அந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனராக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்தவர் பாசின்.
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.(நிதி) படித்தார். அதே பல்கலைக்கழக சட்ட மையத்தில் எல்.எல்.பி. படித்தார். எம்.எஸ்சி.படித்து பின்னர் கிரிமினாலஜியிலும், தடயஅறிவியலிலும் டிப்ளமோ பெற்றவர்.
சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நேற்று அவர் பதவி ஏற்றார்.
பொதுவாக வங்கித் துறையில் பணியாற்றும் தமிழர்கள் கூட இந்தியில் கையெழுத்துப் போடும் இந்த காலகட்டத்தில், பாசின் தமிழில் கையெழுத்திட்டு அசத்தினார். தான் பல ஆண்டுகளாகவே தமிழில் கையெழுத்திடுவதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தும் நல்ல தமிழில் பேசி, தமிழில் மட்டுமே பாசின் கையெழுத்திட்டதை பார்த்த சக அதிகாரிகள் அவரை வியப்புடன் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications