Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 பெண்களை மணந்து மோசடி செய்த ஆத்தூர் நபர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: 7 பெண்களை மோசடி செய்து திருமணம் செய்த நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்நதவர் தங்கவேலு. இவருக்கு 49 வயதாகிறது. இவர் கடந்த 1980ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணைக் கல்யாணம் செயாதார். பின்னர் அடுத்த ஆண்டே அவரைப் பிரிந்து விட்டார்.

இதையடுத்து 1988ம் ஆண்டு சாந்தி என்பவரை மணந்தார். பின்னர் அதைத் தெரிவிக்காமல் 1991ம் ஆண்டு சித்ரா என்பவரையும் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சித்ராவின் தங்கையை தனது வலையில் வீழ்த்தினார். அவரை 1992ம் ஆண்டு கல்யாணம் செய்தார்.

இத்தனை கல்யாணம் செய்த தங்கவேலு 2004ம் ஆண்டு ரம்யா என்பவரையும் மணந்துள்ளார். இப்படியாக 7 பேரை மணந்து மோசடி செய்தார் தங்கவேலு.

இந்த நிலையில் சித்ரா மூலமாக பிறந்த பெண்ணுக்கு, நாகரீகமே இல்லாமல் ஆபாச எஸ்எம்எஸ்களை அணுப்பியுள்ளார் தங்கவேலு. இதையடுத்து சித்ரா போலீஸில் புகார் கொடுத்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தியதில் தங்கவேலு சிக்கினார். அவரைக் கைது செய்த பின்னர்தான் தங்கவேலு 7 பெண்களை மோசடியாக மணந்தது தெரிய வந்தது.

அவரது திருமண மோசடி லீலைகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+