திருச்சி அருகே சாலை விபத்து - 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் திருகனூர் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பாதசாரி ஒருவரும், காரில் பயணித்த இருவரும் பலியானார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருகனூர் அருகில் உள்ளது நெடுங்கூர் கிராமம். இப்பகுதியில் இன்று காலை மாருதி எஸ்டீம் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
வேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார் பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாதசாரியை மோதிவிட்டு நிற்காமல் தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் காரி்ல் இருந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்தார்கள். விபத்தில் பலியானவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications