ஏப்.14ல் தலித் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் வரும் 14ம் தேதி தலித் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் சம்பத் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி அன்று நெல்லையில் தலித் கிறிஸ்தவர்கள் உரி்மை மீட்பு மாநாடு நடத்த உள்ளோம்.

இதில் மார்க்கிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் எம்பி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ்சி, எஸ்டி கமிஷன் தலைவர் நீதிநாதன், பிஷப்புகள் கிருஸ்துதாஸ், ஜூடு பால்ராஜ், மற்றும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள், தலித் இன தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 60 ஆண்டுகளாத தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் பிறப்புரிமைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது என்று சம்பத் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+