சானியா கல்யாணத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம்-20 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: சானியா மிர்ஸா, சோயப் மாலிக் திருமணத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்த்து. இதையடுத்து 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா கல்யாணம் செய்து கொள்ளவுள்ளார். இதை எதிர்த்து சிவசேனா முதலில் குரல் கொடுத்தது. இருப்பினும் தற்போது கல்யாணத்தை எதிர்க்கவில்லை என்று அக்கட்சி கூறி விட்டது.
இருப்பினும் ஆங்காங்கே இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் மதுரையில் இந்து இளைஞர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சானியா, சோயப் மாலிக் கல்யாணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications