சென்னை ஐகோர்ட்: புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் நியமிக்கப்பட உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். ஜனாதிபதியின் உத்தரவு கிடைத்ததும் இவர் புதிய பதவியை ஏற்பார்.
எனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஜார்க்கண்ட் உயர்நீதி்மன்ற மூத்த நீதிபதி எம்.ஒய்.இக்பால் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ளார்.
59 வயதான எம்.ஒய்.இக்பால், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்டம் பயின்றவர். பாட்னா உயர்நீதிமன்றத்திலும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.












Click it and Unblock the Notifications