முதல்முறையாக பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக!
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது இதுவே முதல் முறை.
பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் கடந்த 28ம் தேதி நடந்தது. தேர்தல் நடந்த 198 கவுன்சிலர் பதவி இடங்களுக்கு ஆயிரத்து 1,342 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு முடிந்து வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், 112 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 64 வார்டுகளிலும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 15 இடங்களிலும் வென்றுள்ளன.
சுயேச்சை உள்ளிட்ட மற்றவைக்கு 7 வார்டுகள்.
பெங்களூரில் வெற்றி முகத்துடன் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா,
'நன்றாக பணியாற்றினால், வளர்ச்சியில் உண்மையாக அக்கறை காட்டினால் மக்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள் என்பதற்கு இந்த வெற்றியை விட சிறந்த உதாரணத்தை நாம் தேட வேண்டியதில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications