For Daily Alerts
Just In
ரஷ்யாவில் மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் – போலீஸ்காரர் பலி
ரஷ்யாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது. இன்று வடக்கு காகாஸஸ் பிராந்தியத்தில் உள்ள இங்குஷெடியா மாகாணத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
காராபுலாக் என்ற இடத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. பலர் இதில் காயமடைந்தனர். தலைநகர் மகஸ் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காராபுலாக்.
இதற்கு முன்பு தலைநகர் மாஸ்கோ, தஜஸ்தான் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்து மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பிற பகுதிகளுக்கும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் பரவியுள்ளதால் ரஷ்ய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
Comments
Story first published: Monday, April 5, 2010, 10:45 [IST]