சட்டசபை – மின் தடையைக் கண்டித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

Assembly
சென்னை: இன்று கூடிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் விவாதக் கூட்டத்தில், மின்வெட்டைக் கண்டித்து அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபையில் மார்ச் 19ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மார்ச் 26ம் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 நிமிடங்களில் அன்றைய கூட்டம் முடிவுக்கு வந்தது. பிறகு ஏப்ரல் 5ம் தேதிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று சட்டசபை மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும், தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிடத் தொடங்கினர்.

பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக, இடதுசாரிகள், பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து வெளியேறினர்.

இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் அறையில், சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த்து.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், மே 14ம் தேதி வரை சட்டசபை பட்ஜெட் விவாதக் கூட்டம் நடைபெறும். மொத்தம் 29 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+