சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – உறவினர்
ஹைதராபாத்: சோயப் மாலிக்குடன் ஏற்பட்ட உறவால் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்து விட்டது. இது சோயப்புக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஆயிஷாவின் உறவினர்.
இதுகுறித்து ஆயிஷாவின் உறவினரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், சோயப் மாலிக், ஆயிஷா திருமணம் நடந்த்துடன் அனைத்தும் முடிந்து விடவில்லை. மாறாக சோயப் மூலம் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் அது பின்னர் கலைந்து விட்டது. இது சோயப்புக்குத் தெரியும்.
இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இருவரும் 14 முறை சந்தித்துள்ளனர்.
ஆயிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய துன்புறுத்தினார் சோயப் மாலிக் என்றார் ஷம்ஸ்.
சோயப்புக்கு எதிராக வலுவான ஆதாரம் – ஆயிஷா வக்கீல்
இதற்கிடையே, சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டும். கல்யாணத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று ஆயிஷாவின் பாகிஸ்தான் வக்கீல் பாரிஸ்டர் பரூக் ஹசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது முக்கிய குறிக்கோள், சோயப் மாலிக்கின் மோசடியை அம்பலப்படுத்துவதுதான். அவருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகிறோம். இடைக்காலத் தடையை நிச்சயம் பெறுவோம்.
சோயப் – சானியா கல்யாணத்தை தடுத்து நிறுத்தத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார் ஹசன்.












Click it and Unblock the Notifications