நெல்லையில் தப்பி ஓடிய கைதி மருத்துவமனையில் பிடிபட்டார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையி்ல் தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் டென்னிசன்.

இவர் மீது திசையன்விளை, நாகர்கோவில் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம் டென்னிசனை கைது செய்த போலீசார் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் டென்னிசன் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நேற்றிரவு கழிவறைக்கு செல்வதாக கூறிய டென்னிசன் போலீசை ஏமாற்றி விட்டு மாடியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார்.

தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சென்று ஹைகிரவுண்ட் மற்றும் மகாராஜா நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

பஸ், ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். டென்னிசன் மாடியில் இருந்து குதித்ததில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

இதனால் அவர் நடக்க முடியாமல் மகாராஜா நகர் பகுதியில் பதுங்கியிருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து மீண்டும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+