ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு உயரலாம்! - கமல்நாத்
டெல்லி: ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆயுதத் தேவையை நிறைவு செய்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பாக வெளியிட இன்னும் அவகாசம் இருப்பதாகவும், இதில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வர்த்தக அமைச்சகம் மட்டுமின்றி பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், தொழில் கொள்கை துறை, மத்திய திட்டக் குழு உள்ளிட்டவை இது குறித்து விவாதித்து வருகின்றன.
அரசு நிறுவனங்களின் தளவாட உற்பத்தி மதிப்பு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை. இவை போதாத நிலையில் தனியார் நிறுவனங்கள் சிலவும் ஆயுத உற்பத்தியில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 26 சதவீதத்துக்கு இருக்கலாம்.
இன்றைய நிலையில், லார்சன் அன்ட் டியூப்ரோ, டாடா, மஹிந்திரா, புஞ்ச் லாயிட் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஆயுத தளவாட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளன.
ராணுவத்தில் மொத்தம் 15 லட்சம் வீரர்கள் உள்ளனர். உலகிலேயே மிக அதிக அளவு படை வீரர்களைக் கொண்டுள்ள இரண்டாவது பெரிய நாடு இந்தியாதான்.
எனவே ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டின் பங்கை இன்னும் சில சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications